இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


காதல் ஆண்டிவைரஸ்..!




 கணிணி(கன்னி)தேவதையே..!

கணிணியின் கற்பிற்கு களங்கம் வைரஸ்..!- நம்
காதலின் கற்பிற்கு களங்கம் உன் சைலன்ஸ்..!
சைலன்சை நிறுத்தி என்னை டவுன்லோடு செய்து
உனக்குள் இன்ஸ்டால் செய்துக்கொள்ளடி..!
       
ஆயிரம் வைரஸ் இங்கிருந்தாலும் உன்னை
அழியாமல் காப்பேன் ஆறுதலாய் உடனிருந்தே..!
உனக்குள் நான் இருக்கின்ற வரைதனில்.-ஒரு
தீங்கும் சேராமல் உன்னைக்காப்பேனடி...
     
ஒருமுறை எனை உனக்குள் புதைத்துக் கொள்ளடி..!
மறுகணமே உனக்கு நானும் அடிமை தானடி..
உன்னை காக்கும் பொறுப்பு கொண்டு
தினமும் தூங்காமல் இருப்பேனடி..!
           
வாழ்வில் ஒருமுறை ஏற்றுக்கொள்ளடி..- உனை
வாழ்வின் இறுதிவரை நலம் பெற செய்வேனடி..!
வாழ்வில் நல்லன,கெட்டன எவையென்று அறிந்து
நல்வழி காட்டி அழைத்துச்செல்வேனடி..!

1 கருத்துரைகள்:

செய்தாலி said...

காதல் வைரஸ்
ம்ம்ம் அருமை அருமை தோழரே

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.