இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா”






காதலிக்கநேரமில்லை!.கண்ணே!.. நம் நாட்டை
கயவர்களிடமிருந்து மீட்கும் வரை..
 
கல் மூலம் கண்ட தெய்வம் கொண்டு..
கண்ணுக்குத்தெரியாத வடிவங்கள் கொண்டு தினம்
கலவரங்கள் செய்பவர்களை மத வியாதியில்லாத..
மனிதனாக மாற்றும் வரை..

மதவாத வெறிகொண்டு மாண்டு போகின்ற..
மடையர்களை..மனிதநேயம் கொண்ட
மனிதனாக மாற்றும் வரை..

அமைதிப்பூங்காவாம்..இந்தியாவை
ஆயுதம்கொண்டு அழிக்கின்ற புயல் காற்றை..
அமைதி எனும் அன்பு கொண்டு
அடக்கி ஆளும் வரை..
அழகான நதியான மதங்களுக்குள் - தினம்
அழுக்கடைந்த அரசியல் சாக்கடையை கலக்கி
அமுதத்தை விஷமாக்கும் அந்த
அரசியல் நயவஞ்சர்களை..
அன்பானவர்களாக மாற்றும் வரை...

காதலிக்க நேரமில்லை!..கண்ணே!..


இங்கு மட்டும் தான்..




இங்கு மட்டும் தான்..
மீன்கள் தூண்டில் போட..
மீனவர்கள் மாட்டிக் கொள்கின்றனர்.

                          
இங்கு மட்டும் தான்..

மான்கள் வேட்டையாட..
புலிகள் இரையாக்கப்படுகின்றன.


இங்கு மட்டும் தான்..
மலர்கள் விழுந்து..
முட்கள் காயமாகின்றன.


இங்கு மட்டும் தான்..

ஆறுகள் கலக்கப்பட்டு..

கடல்களும் நன்னீராக்கபடுகின்றன.

                       

இங்கு மட்டும் தான்..
அன்பு எனும் ஆயுதம்கொண்டு..
இதயங்கள் இடம் பெயர்க்க படுகின்றன.
                    


எங்கு..????..........................  
.............................................
...............................காதலில்.

எனது முத்தான மூன்று முடிச்சு ..(கலை அண்ணாவின் அன்பு வேண்டுகோள்கிணங்க.)







பிடித்த உறவுகள்


1.பெற்றோர்.
2. மனைவியும், மகனும்.
3. நண்பர்கள்.


பிடித்த உணர்வுகள்.                


1.அன்பு பொங்கி அழுகின்ற உணர்வு.  
2.பிடித்த இசையில்   கரையும் உணர்வு.
3.கவிதையில் நுழைந்து திரியும் உணர்வு.


பிடிக்காத உணர்வுகள்.            

1.எப்போதும் அமைதியாக இருக்கும் உணர்வு.
2.மனது சொல்வதை உடல் செய்யாத உணர்வு.
 3.எதிர்காலத்தை பற்றி எப்போதும் நினைக்கும் 
 உணர்வு.


முணுமுணுக்கும் பாடல்கள் 

1.புது வெள்ளை மழை.(ரோஜா )
2.அனல்மேலே பனித்துளி(வாரணம் ஆயிரம் )
3.பூக்கள் பூக்கும் தருணம்.(மதராச பட்டிணம்)
 (இனிய மெல்லிசை காதல் பாடல்கள் 
 அனைத்தும்)


பிடித்த திரைப்படங்கள்


1.குருதிப்புனல்
2.காதலுக்கு மரியாதை..
3.வாரணம் ஆயிரம்.


அன்புத் தேவைகள்


1.அன்பானவர்களிடமிருந்து அன்பு மட்டுமே.
2.என் அன்பின் ஆழம் 
 தெரியவர்களிடமிருந்தும்.அன்பு மட்டுமே.
3.என்றும் அவர்களின் உறவும்..உன்னதமான 
 அன்பும்.


வலிமையை அழிப்பவை


1.காதல்..
2.தூக்கம். 
3.துக்கம்.


குட்டித் தத்துவம்


1.உனக்கென வாழ்வதை உன்   
 உள்ளத்திலிருந்து  எடுத்து விடு.
2.அன்பே மதம்...நட்பே வேதம்...
3.எச்சங்களின் இன்பமே உலகாகும்..
 இவ்வுலகில் மாறாத நியதி இதுவாகும்.


பயமுறுத்தும் பயங்கள்


1.தனிமையான வாழ்க்கை.
2.நட்போடிருந்து புறம் பேசுவது.
3.நம்பிக்கை துரோகம்


அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்

1.தனி மனிதனாய் பிறந்தேன்.நல்ல மகனாய் 
 நல்ல தந்தையாய் இறக்கவேண்டும்.
2.ஒருமுறையேனும் எனது வரிகள் 
 திரைப்படத்தில் அரங்கேற வேண்டும்.
3.மகிழ்ச்சியான நிலையிலேயே என் மரணம் 
 வேண்டும்.


கற்க விரும்புவது


1.தமிழ்மொழி தவிர மற்றமொழிகளும் கற்க 
 வேண்டும்.
 2.மனிதர்களின் மனம் பற்றி கற்க வேண்டும். 
3.கணிணி துறையில் வடிவமைப்பு, மற்றும் 
 படம் வரைதல் கற்க வேண்டும்.


வெற்றி பெற வேண்டியவை 

1.எளிதாக வேலை செய்து வெற்றி அடைய 
 வேண்டும்.
2.தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்.
3.உறுதியான சோர்வடையாத உடலும் மனமும்.


சோர்வு நீக்க தேவையானவை

1.மெல்லிய இனிமையான இசை
2.இணையத்தில் உலாவுவது.
3.நகைச்சுவை விஷயங்கள் பார்ப்பதும் 
 படிப்பதும்.


எப்போதும் தயாராக இருக்க வேண்டியது  


1.புன்னகை தவழும் முகம்.
2.இனிமை கலந்த பேச்சு.
3.நலம் விசாரித்து உதவும் குணம்..


முன்னேற்றத்திற்கு தேவை   

1.எளிதாக வேலை செய்து வெற்றி அடைய 
 வேண்டும்.
2.தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்.
3.உறுதியான சோர்வடையாத உடலும் மனமும்.


எப்போதும் அவசியமானது 


1.புன்னகை தவழும் முகம்.
2.இனிமை கலந்த பேச்சு.
3.நலம் விசாரித்து உதவும் குணம்..


பிடித்த தத்துவம் 


1.எண்ணங்கள் சிறப்பாக இருந்தால் 
 செயல்களும் சிறப்பாகவே அமையும் (என் 
 தத்துவம்.)
2.உடம்பின் ஒரு செல் கூட மற்றவரின் 
 அதிகார சொல்லால் அழியக்கூடாது. 
 (இதுவும் என் தத்துவம்.).
3.எது நடந்ததோ..? அது நன்றாகவே நடந்தது..! 
 (கீதாச்சாரம் )


தெரிந்து தெரியாது குழப்புவது 

1.கணிதம்.
2.ஒரு வேலை சரியாக செய்து 
 முடித்திருப்பின் மீண்டும் அது தவறா.?  
 சரியா..?என குழம்புவது.
3.கனவில் நடந்த விஷயம் நிஜத்தில்  
 மீண்டும் நடக்கும் போது.

எரிச்சல் படுத்துபவர்கள்

1.சொன்ன விசயத்தையே மீண்டும் மீண்டும் 
 சொல்பவர்கள்..
2.தற்பெருமை பேசுபவர்கள்.
3.சொன்ன சொல் தவறுபவர்கள்.


மனங்கவர்ந்த பாடகர்கள்


1.உன்னிக்கிருஷ்ணன்
2.ஹரிஹரன்.
3.கார்த்திக். எஸ்.ஜானகி..சுதா ரகுநாதன் 
 சுசித்ரா..(இன்னும் பட்டியல் நீளும்.)


இனிமையானவை 


1.பழைய நினைவுகளை மனதில் அவ்வபோது 
 மனதில் அசை போடுவது.
2.தூங்குகின்ற இரவு நேரம்.
3.கவிதை எழுதும்போது நல்லவரிகள் மனதில் 
 உதிக்கும்நேரம்.


சாதித்தவர்களின் பிரச்சனைகள் 


1.தனிமனித சுதந்திரம் பறிபோதல்.
2.சாதனையை தக்கவைக்க தடுமாறுதல்.
3.கிசுகிசுக்கள் அவர்களை தினமும் பந்தாடுதல்.


பிடித்த பழமொழிகள்


1.ஈன்றபொழுதில் பெரிதுவக்கம் தன் மகனை 
 சான்றோன் என கேட்ட தாய்.
2.இன்னா செய்தாரே ஒருத்தர் அவர் நாண 
 நன்னயம் செய்து விடல்...
3.களவும் கற்று மற.  
  
இது போல் பதிவிட நான் அழைக்கும் நண்பர்கள்..

தஞ்சை வாசன்..

மணிஅஜித்

மாணிக்




தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.