இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


அப்பா..! எனக்கு கல்யாணம்..!




பகட்டான வாழ்க்கை..தேடி
பணம் எனும் காகிதம் சேகரிக்க..
பாசத்தை அடகு வைத்து...
பாரினில் வந்து சேர்ந்தேன்..
         
வந்து சேர வாங்கிய பணத்தின்          
வட்டி கட்ட வருடம் ஒன்றானது..
முழுக்கடன் முழுதாய் தீர்க்க
மீண்டும் எனை அடகு வைத்தேன்..
வேலையைப் புதுப்பித்து.
        
அலைபேசி வாழ்க்கை வாழ்ந்து
தொலைந்து போனது..இளமை...
அல்லும்பகலும் அயராது உழைத்து
இதயமும் இரும்பாகிப் போனது.
         
பணமென்ற பிணமொன்றை
தழுவித் தாங்கிக் கொள்ள..
பிணமாகிப்போனேன்...என்
பிள்ளை மனம் கல்லாக
காரணம் நான் ஆனேன்.
          
வாலிபத்தில் வந்தவனின்
இளமைகள் சுரண்டப்பட்டு..
இன்பங்கள் அழிக்கப்பட்டு..
வேலிகட்டி வாழ்கிறேன்..
வெளிநாட்டில்...நானும்..
                                       
போதுமென்று அளவோடு...
புறப்பட யத்தனித்த நேரத்திலே..
அலைபேசியில் அழைக்கிறான்..
ஆசையோடு..அன்பு மகன்...
அப்பா..!எனக்கு கல்யாணம்..!
மறக்காமல் இந்த மாதம்..
பணம் சேர்த்து அனுப்பிடு..! என்று.

பண மரமாகிப் போனெனோ..நான்..?
என் பாசத்தின் விலைதனை
அறிவானோ..அவனும்..?

மீண்டும் தொடருகிறேன்...
மீதமுள்ள நாட்களை...
வாழ்வில் இணைந்த உள்ளங்கள்..
நலமோடு வாழவே..!

எனது சிறு கவிதைகள் -3 ( சோகம் )





 நீ சோகமா..?
மனதின் ஆழத்தில் சோகம் இருந்தால் கவிதை வருமாம்..!
என் மனதின் ஆழத்தில் நீயுள்ளாய்..!
கவிதை அருவியாய் வருகிறது..நீ சோகமா..?

செல்லரிப்பு
செத்தபின்பு செல்லரித்து போகின்ற உடல் இது..
உன்இல்லைசொல்லால்                       
செல்லரிக்க வைத்து விட்டாயே..? என்
உயிர் நீ இருக்கும் போதே...!
           
கலங்கிய மேகமாய்...
கரையோடு அலைபேசும் பேசும் 
காதல் கலங்கியதில்லை என்
கண்களோடு நீ பேசும் மௌனம் மட்டும்..-
கலங்கிய மேகமாய் ஆக்கியதடி..! என் கண்களை..

வானம் பார்த்த பூமி
வானம் பார்த்த பூமியாய் நான் உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீ மட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!           

பலூன்
முள்பட்டால் உடைந்துவிடும் பலூன்  போல -உந்தன்
சொல்பட்டதால் உடைந்ததடி..- என் மனது...
                          

காதல் ஆண்டிவைரஸ்..!




 கணிணி(கன்னி)தேவதையே..!

கணிணியின் கற்பிற்கு களங்கம் வைரஸ்..!- நம்
காதலின் கற்பிற்கு களங்கம் உன் சைலன்ஸ்..!
சைலன்சை நிறுத்தி என்னை டவுன்லோடு செய்து
உனக்குள் இன்ஸ்டால் செய்துக்கொள்ளடி..!
       
ஆயிரம் வைரஸ் இங்கிருந்தாலும் உன்னை
அழியாமல் காப்பேன் ஆறுதலாய் உடனிருந்தே..!
உனக்குள் நான் இருக்கின்ற வரைதனில்.-ஒரு
தீங்கும் சேராமல் உன்னைக்காப்பேனடி...
     
ஒருமுறை எனை உனக்குள் புதைத்துக் கொள்ளடி..!
மறுகணமே உனக்கு நானும் அடிமை தானடி..
உன்னை காக்கும் பொறுப்பு கொண்டு
தினமும் தூங்காமல் இருப்பேனடி..!
           
வாழ்வில் ஒருமுறை ஏற்றுக்கொள்ளடி..- உனை
வாழ்வின் இறுதிவரை நலம் பெற செய்வேனடி..!
வாழ்வில் நல்லன,கெட்டன எவையென்று அறிந்து
நல்வழி காட்டி அழைத்துச்செல்வேனடி..!

உணர்வுகளா..?! உணர்ச்சிகளா..?!




தேகத்தைத் தின்று
தேனமிர்தம் திகட்ட குடித்து
தீச்சுவர் உடலில் தகிக்கும்
தீச்சுவாலையை சுவைத்துத்
தீய்ந்துபோய் இறந்துபோக
சாபம் ஓன்று கேட்பேன் உன்னிடம்..அந்த
சாபமாய் உன்னையே கேட்பேன்..!உன்னிடம்.

தழுவலின் தேடலில்
தவழுகின்ற இன்பங்கள்..
அறிந்திடாத விடயங்கயறிய
அரிய சொர்கத்தின்
அற்புத கதவினை திறந்திட
அந்தரங்க சாவி கேட்பேன்..!உன்னிடம்.
                               
வேர்நீராய் உன்னுள் நுழைந்து
விளைநிலமாய் உனை மாற்றி
வெகுண்டலச்செய்திடும்   
கிளர்ச்சி நரம்பினை
பிடித்தெழுத்து முறுக்கிட
அனுமதி கேட்பேன்..!உன்னிடம்.

இதயத்தின் சாயலின்
இதழ்களில் தேனை சுவைத்து
இவ்வுலகின் இனிமைதனை
சுரக்கும் அற்புத ஊற்று.அதை
ஒரு துளியும் சிந்தாமல் குடித்திட
உன் இதழ்கிண்ணம் கேட்பேன்..!உன்னிடம்.
             
இன்பத்தின் வழி தனை
இருவரும் கண்டு கொண்டு..-பின்
இருவரும் தொலைந்து போவோம்.
இயற்கையின் ஈர்ப்பில் பிணைந்து
இணைந்து கொள்வோம்..

இன்பலோகம் எதுவென்று அறிந்து
இன்பத்தின் சூட்சமத்தில் சிக்கித்திணறி..
இன்பமாய் இறந்து போவோம்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.