இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


கரை சேரா ஓடங்கள்



கூவத்து பக்கத்திலே..நம்ம குடிச இருந்தாலும்..
உசந்த இடத்தில..உன்னத்தான் தங்க வச்சு படிக்கத்தான்
உன்ன வைக்க தினம் கால் வயிறு கஞ்சி குடுச்சேன்..
                 
குடிகார உங்கப்பன் கூத்தியளோட சேர்ந்திருக்கான்..
குடிக்க தினமும் காசு நான் தந்தா..
குடித்தனம்..எங்கக்கூடயாம்..
குடிக்க காசு தந்துட்டா..உன்ன படிக்க யார் வைப்பா..?
                
அரசாங்க வேல..கிடைக்காம போயடுமெனு
பள்ளிக்கூட படிப்ப பாதியில நிறுத்திப்புட்டு
சாக்கடைய அள்ள வச்சான்...சண்டாளன்..எங்கப்பன்..
சாகுற வர எம்பொலப்பு சாக்கடைன்னு ஆனாலும்..
                
ஊருக்குள்ள உள்ள அழுக்க கழுவ
கொஞ்சம் என்னால முடிஞ்சது..மனுச
உடம்புக்குள்ள உள்ள அழுக்க கழுவ
யார் இருக்கா..ஊருக்குள்ள..?

கூவத்தில பிறந்த மக..கோட்டையில கொடி ஏத்துவா...
நம்ம குறையெல்லாம் தீர்ப்பான்னு..மனக்கோட்டை கட்டி
வச்சிருந்தேன்..பாவி மக சிறுக்கி...! நீ படிப்பை பாதியில
நிறுத்திப்புட்டு காதல்ல சிக்கி ஓடிப் போனாயே..!
என்னயும்..தல முழுகி தனியாளா ஆக்கினாயே..!


தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.