இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


ஆசையுண்டு!. பெண்ணே!. ஆசையுண்டு!..




மண்ணுக்குள் செல்லும்
மண்புழுவைப் போல்..-உன்
மனதுக்குள் செல்ல ஆசையுண்டு!..

உன் விழிக்குள் என்னையும்..
என் விழிக்குள் உன்னையும்..
தினந்தோறும் தேட ஆசையுண்டு!..

நிழலுக்காக நீ மரத்தின் கீழே
நின்றபோது மர நிழலின்..
நிஜமாய் மாற ஆசையுண்டு!..
         
அற்புதமாய் நீ வாசிக்கும் ஆனந்த ராகமாய்..
அடிக்கடி நீ திட்டுகின்ற வார்த்தையாய்..-உன் 
ஆசை என்ற எண்ணமாய் மாற ஆசையுண்டு!..
           
அனல் பறக்கும் அறையில் அமரவைத்து..-உனக்கு
அழகாக வியர்க்கின்ற அந்த...
அதிசயத்தை பார்க்க ஆசையுண்டு!..

சாதனைகளும்,சகாப்தங்களும்..
சரித்திரங்களில் பதியும் வேளையில்..
சாலையில் நீ வரும் வழி நோக்கி..காத்திருந்து
சாக தினந்தோறும் ஆசையுண்டு!..



2 கருத்துரைகள்:

abilakshmi said...

i like your poem

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

thanks for your comments..

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.