இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


வாழ்வியல் கணிதம்..!



 
வாழ்வில் அன்பை கூட்டிக்கொள்..!அந்த (+)
கூட்டல்கள் ஈட்டித் தரும்.. உனக்கு சந்தோஷத்தை.

வாழ்வில் நட்பை பெருக்கிக் கொள்..!அந்த (× )
பெருக்கல்கள் உன் வாழ்வு முடிந்த பின்பும்..
வாழும் அவர்கள் நெஞ்சில்..

வாழ்வில் வாழும் முறைகளை (÷ )
வகுத்துக் கொள்..அந்த
வகுத்தல்கள் உன் வாழ்வை வளர்பிறையாக்கும்..

வாழ்வில் சோகத்தை கழித்துக் கொள்..! அந்த (-)
கழித்தல்கள், உன்னை அழித்தல்கள்
இல்லாத ஓவியமாய் காட்டும்.

வாழும் வாழ்வினை சமமாக்கி கொள்..(=)
வேறுபாடு இல்லாத சமூகம் வேரில்
கிளைதளைக்க அது பயன்படும்.

வாழ்வின் ஏற்ற இறக்கங்களை கண்டுகொள்..(< >)
உன்னை வார்த்தெடுத்த தங்கமாய்
மாற்றி அமைக்கும்..
 
வாழ்வின் குறைநிறைகளை கண்டறிந்து கொள்..(+-)
வசந்தமாய்..உன் வாழ்வு மாற அது வகை செய்யும்

3 கருத்துரைகள்:

தமிழ்த்தோட்டம் said...

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்

செய்தாலி said...

எதையும் ஆக்கப்பூர்வமாக நிறைய சிந்தித்து எழுது வல்லமை காட்டுகிறது உங்கள் கவிதை வரிகள்

ம்ம்ம் அருமை பாராட்டுக்கள்

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் நண்பரே...

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.