இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


பெண்ணே..நீ..விளக்கு..!




மங்கையே..!
     
மங்கையாய் நீ பிறந்ததால் இந்த
மண்ணுலகம் மகிழ்ச்சியடையட்டும்..!
பூவையாய் நீ பிறந்ததால் இந்த
பூலோகம் பெருமையடையட்டும்..!

அடுப்படிக்குள்  அடைபட்டு..
மூன்று முடிச்சில் சிறைபட்டு..
சின்னத்திரைக்குள் சிதைக்கப்பட்டு..உன்
எண்ணமெல்லாம் புதைக்கப்பட்டு..
                            
சேய் தரும் இயந்திரமாகி..
தினம் இரவில் படுக்கையாகி..
காலம் தள்ளியது போதும்..!
வெளி உலகம் பார்..!
வெளிச்சமின்றி உள்ளது..நீயின்றி
வெறுமை கண்டே உள்ளது..!
      
பெண்மையின் பெருமையை..
மங்கையின் தன்மையை இந்த
உலகம் புரிய ஏற்று..!
உலகம் விளங்க ஏற்று..!
உன் அறியாமை விலக ஏற்று..
ஒளியை விளக்கில்.            
             
உன் எண்ணம் உலகம் அறிய.
பெண்ணே நீ விளக்கு..!
அன்பாய் விளக்கு..! அறிவாய் விளக்கு..!
தெளிவாய் விளக்கு..என்றும் தெரிவாய்..
அதில் நீ விளக்காய்...!
             

5 கருத்துரைகள்:

செய்தாலி said...

பெண் ஒரு ஒலிவிளக்குதான் நண்பா
அற்புதமான கவிதை

நண்பா
விருது ஓன்று பகிர்ந்துள்ளேன்
நேரம் கிடைப்பின் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்

Anonymous said...

சுபேரா இருக்கு அண்ணா உங்க கவிதை ...

Anonymous said...

சுபேரா இருக்கு அண்ணா உங்க கவிதை ...

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

நன்றி..கலை தங்கையே..

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

நன்றி..செய்யது நண்பரே..

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.