இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


தினமும் அன்பின் தினமே..!


             
சில காதல் இயற்கையின் பிடிப்புகளில்..
சில காதல் எண்ணத்தின் எழுத்துகளில்..
சில காதல் பாசத்தின் வெளிபாடுகளில்..
சில காதல் நட்பின் எழுச்சிகளில்..
சில காதல் குறும்புகளின் கொக்கரிப்புகளில்..
சில காதல் நகைச்சுவையின் ஈர்ப்புகளில்..    

சில காதல் குடும்ப உறவின் பிணைப்புகளில்..
சில காதல் ஈகைமன வசிப்புகளில்..
சில காதல் ஒழுக்கத்தின் உயிர்ப்புகளில்...
உருவானாலும் "அன்பு" ஒன்றே.
அவற்றின் உருவகம். -அந்த
            
அன்பின் வேதம் கொண்டு..
அழகாய் காதல் கொண்டு..
வேசமில்லா நேசம் கொண்டு..
வாழ்வின் இறுதிவரை இந்தஅன்பை 
தினமும் பரிமாறிக் கொண்டால்.
நமக்கு..தினமும் அன்பின் தினமே..!

2 கருத்துரைகள்:

செய்தாலி said...

ரெம்ப அருமையா சொன்னீங்க தோழரே

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

மிக்க நன்றி..செய்யது நண்பரே..!

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.