இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


எப்படி நுழைந்தாய்..எனக்குள்ளே..?


எப்படி நுழைந்தாய்..எனக்குள்ளே..?
என்று நான் கேட்கும் முன் நீ..கேட்கிறாய்..
இங்கே முதலில் நுழைந்தது..
நீயா.?! இல்லை..நானா..?!

என்னுள் நீ நுழைந்தது..
மண்ணுக்குள் நுழைந்த
மழை நீரைப் போலவா..?!
இல்லை...
நான் உன்னுள் நுழைந்தது..
மாம்பலத்தில் நுழைந்த
கூன் வண்டு போலவா..?!

என் வார்த்தை வரிகளின்
தவறுகளை நீ திருத்தும் போது..
என் வாழ்வின் வரிகளும்...
உன் திருத்தல்களால்..அழகாய்..

உனக்குள் நான் இருப்பதை நீ
உன் இதழ் வார்த்தையால்
உலகிற்கு தெரிவிக்கா விட்டாலும்..
உன் உள்ள(ம்) உதடு சொன்ன ஒரு
வார்த்தையில் நான் தெரிந்தேன்..
அதில் திளைந்தேன்..நான்.

நீ சொல்லாவிட்டால் எனக்கென்ன..?
உன் இமைகின்ற கண்கள் சொல்லுதடி...
இது போதும் இவனுக்கு..
இவ்வுலகில் பிறந்ததற்கு..

என் வசந்தத்திற்கு என்றும்
தொடரும்..புள்ளியாய்..நீ
என் வாழ்வின் மொத்தத்திற்கும்
முற்றிர்க்கும் முற்றுப்புள்ளியாய் நீ..

2 கருத்துரைகள்:

செய்தாலி said...

ம்ம்ம்... அருமை அருமை
வரிகளில் காதல் ததும்புகிறது கவிஞரே

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

நன்றி..நண்பரே...

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.