இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


ஆசை தான்..எனக்கு.




கடற்கரையில் நீ செல்லும் போது -உன்
கால்பாதத்தை தடவிச்செல்லும் ..
கடலைலையாய் மாற ஆசை தான் எனக்கு..!


தோட்டத்திற்குள் நீ செல்லும்...போது
பட்டுபூச்சியாய் ,உனது மேனியில்
தொட்டுவிட்டு செல்ல ஆசை தான் எனக்கு..!

தென்னந்தோப்பிற்குள் நீ செல்லும்...போது
தென்னங்கீற்றாய் மாறி,உன்

தேகத்தை தீண்டிச்செல்ல ஆசை தான் எனக்கு..!


ரோஜா தோட்டத்த்திற்குள் நீ செல்லும்...போது
உனது சேலையை பிடித்திழுக்கும்
முள்ளாய் மாற..ஆசை தான் எனக்கு..!

வழி தெரியாத பாதையில் நீ செல்லும் போது
பாதையாக மாறி உந்தன் வலி தீர்க்க...ஆசை தான் எனக்கு..!


கடற்கரைமணலில் நீ செல்லும் போது உன்
பாதத்திற்கும் ,மண்ணிற்கும் இடையில் சிக்கி
மடிந்து சாக... ஆசை தான் எனக்கு..!


தினந்தோறும் நீ வைக்கும் பூவாக மாறி..
தினமும் வாடி வதங்க ... ஆசை தான் எனக்கு..!


0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.