இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


கடற்கரையில் நான்.

     

கடற்கரையில் உன்னோடு அமர்ந்து அலைகளின்  அற்புதத்தை   
அயராது பேசிய நாட்களும்... 

கடற்கரையின் மணல் அள்ளி
மணிக்கணக்காய் எண்ணிக்கொண்டே பேசாமல் அமர்ந்த நாட்களும்...
  
மணல் வாரி இறைத்து விளையாடும்
மழலையாய் மாற  மாட்டோமோ?..என்று 
மயங்கிய  நாட்களும்...
           
சிறுவன் எறிந்த ஈரமணல்
உன் மூக்கின் மேல் விழுந்ததை பார்த்து
நான் சிரிக்க..நீ சிணுங்கிய நாட்களும்...

கரையோடு கடல் பேசும்  காதலை ..
கண்ணியமைக்காமல்...கண்ட நாட்களும்...
மறக்கமுடியவில்லை என்னால்..

கரையை நோக்கி வரும் அலை போல..
மனதுக்குள் மீண்டும் மீண்டும் நியாபகங்கள்..


இன்று..
நாம்  காதலித்த அதே கடற்கரையில்...
நான்..மட்டும்..தனிமையாக..

2 கருத்துரைகள்:

செய்தாலி said...

ஞாபக வரித் துளிகள்
ம்ம்ம் கவிதை ரெம்ப அருமை நண்பா

Dr goma said...

உங்கள் கவிதை அருமை சூர்யா

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.