இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


உன்னை செதுக்கு..!

                                   


உன்னை செதுக்கு..!
உன்னை செதுக்கு..!
உண்மையின் உளிகொண்டு..
உன்னை செதுக்கு..!
                             
அன்பு மனம் சிதைந்திடாமல்
அழகாய் செதுக்கு..!உன்
ஆறறிவும் ஆக்கம் கொள்ளட்டும்..
அன்பால் செதுக்கு..!
                
பாச குணம் குலைந்திடாமல்
பண்பாய் செதுக்கு..!உன்
நேச குணம் குறைந்திடாமல்.
நேர்மையால் செதுக்கு..!
            
தாழ்ப்புணர்ச்சி தழைக்கவிடாமல்.
கிளையில் செதுக்கு..!
ஜாதி,மதவேறுபாடு வளர்ந்திடாமல்.
வேரோடு அதை செதுக்கு..!
                
அரக்க எண்ணம் எழுச்சிகொள்ளாமல்
அடியோடு செதுக்கு..!
இரக்க குணம் தழைத்தோங்க
இடறுகளை செதுக்கு..!
                
இவற்றை செதுக்குவது எளிதானால்...
பின்..உன்னால் முடியும் 
நீரை செதுக்க..
நெருப்பை செதுக்க...
காற்றை செதுக்க.. 
கடலை செதுக்க..
வானை செதுக்க...இந்த..
வையகத்தை செதுக்க..











0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.