இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


கைம்பெண்ணின் காதல்..க(வி)தை-1


விபரமறியா பருவத்தில்..
விளைந்திட்ட உறவுக்குள்..
விளையாட்டுத் தனத்தோடு..  
இடையிலே..கைகோர்த்து
கடைவீதியை அளவெடுத்து..
நடந்து செல்கையிலே..நம்மில்
முளைத்திட்ட முத்தங்களை
பிரியமென்று நாம் நினைத்ததுண்டு
                
பள்ளிப்பருவத்திலே..
பருவமெய்திடாத நேரத்திலே
சேர்ந்து படித்திட்ட பள்ளிக்குள்
பகிர்ந்திட்ட நம் கல்விக்குள் கலந்திட்டதை
அன்பென்று நாம் சொன்னதுண்டு.

கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து.இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.


திருமண வயதினிலே...
இருமன இணையும் நேரத்திலே
உன் மனம் வேண்டுமென்று
என் மனது தவிக்கிறதே..
அன்பென்று..பாசமென்று..
நட்பென்று..நினைத்ததன்று..
காதலாய் இன்று மாறியதோ....?

                 ( தொடரும்.. )

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.