இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


விதவை




காலங்கள் செய்திடும் கோலங்களில்
கறைபட்டு போன கன்னிகள்.....


பூப்பூக்கும் நந்தவனத்தில் இனி...
பூவே பூக்காத காலம்...


மேகமில்லா வானத்தில் சூரியன்.. இனி...
வரமுடியாத நேரம்..

இதுவல்ல
உங்களின் விதி?..

நீங்கள் நகருகின்ற சுவர்களாக ....
நாள்தோறும் இருந்தது போதும்...


நீங்கள்
உணர்ச்சியற்ற உள்ளங்களுக்கு..

ஒடுங்கியிருந்தது போதும்!...


புதியதோர் சகாப்தம் படைக்க...
புறப்படு பெண்ணே.. புறப்படு...

நீங்கள் கையெழுத்திட்டால்...
கான உலகமும்

இயங்குகின்ற நேரமிது..


நீங்கள் தரலாம் பலருக்கு வாழ்வு அதை
நிச்சயம் உலகம் ஏற்கும்...

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.