இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


காதலித்து பார்..!– சூர்யா




கண்திறந்து கனவு காண்பாய்..!
சாலையில் மிதந்து செல்வாய்..!

உலகம் கவிதையாய்  மாறும்..!- உன்
உள்ளம்  சிறகாக மாறும்..

கல்லும் சிலையாய் மாறும்..!- உன்
சொல்லில் இனிமை சேரும்..!

பூக்களின் மென்மை புரியும்..!
பட்டுப்பூச்சி ஓவியமாய் தெரியும்..!

நெஞ்சில் நடுவில் இன்ப பூகம்பம் பூக்கும்.
இதயத்தின் துடிப்பு இரட்டிபாக்கும்..!

வேதனைகள்  நீ மறப்பாய்..!பெற்றோர்
போதனை யும்  நீ துறப்பாய்..!

உலகம் உன்னைச் சுற்றும்..! உன்
உளறல்கள் உனக்கு பிடிக்கும்.!.

நண்பர்கள் தொலைந்து போவார்கள்..!
நாளை என்பது  தென்படாது..!

நடுஇரவில் உன்தூக்கம் போகும்..! உன்
நடையில் பெண்மை தவழும்..

கணினி உந்தன் தோழன் ஆகும்..
அலைபேசி உன் உயிராகும்..

மொத்தத்தில் நீ அழகாவாய்...
காதலித்து பார்...காதலை..

                                               
                     

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.