இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


“பாஸ்”என்கிற பாஸ்கரன்

            

மடியில் தவழும்
மழலையாயிருந்தபோது -என்னை
அம்மா அழைத்தாள். அன்போடு..
பாஸ் குட்டி

கண்ணா மூச்சி விளையாட்டில்
கண்கள் கட்டி ஒளியும்போது
கைநீட்டி தேடி
நண்பன் அழைத்தான். நட்போடு..
பாஸ்கர்

அரும்பு மீசை அரும்பிய வயதில்
ஆருயிர் தோழன்
அருமையாய் அழைத்தான்.தோழமையோடு 

பாஸ்கரா

கவின்மிகு கல்லுரிப்பருவத்தில்
கைகோர்த்து கும்மாளமிட்ட
நண்பர்கள் கிண்டலுடன் .. 

பாஸ்கி

கவிதை எழுதும் காதல் பருவத்தில்
கண்கள் மயங்கி
காதலி அழைத்தாள் காதலோடு.. 

பாஸ் கண்ணா

பணிபுரியும் இடத்தில்
பழகிய தோழர்கள்
பாங்காய் அழைத்தனர் பணிவோடு ... 

பாஸ்

ஒவ்வொரு நிலையிலும்  என்னை
நெருங்கியிருந்தவர்கள்.. தற்போது  
தொடர்பற்றுசில காலம் மறந்திருக்கலாம்..
இந்த“பாஸ்கரனை.

    'அவர்களின் நினைவுகளில் மீண்டும்
ஒருமுறை  நான்  பூத்திருப்பேன். - உங்கள் 
பாஸ் என்கிற பாஸ்கரன்என்ற படத்தின்  
தலைப்பின் மூலமாக.
அதற்கு என் நன்றிகள்..டைரக்டர் ராஜேஷ்
என்றும் அதே அன்பு,நட்பு,பாசம்
கவிதை,காதல்,பேச்சு,சிரிப்புடன்
அவர்களின் நினைவுகளோடு..
        பாஸ்கரனாகிய..நான்

1 கருத்துரைகள்:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நண்பேண்டா...........

தேனி சூர்யா பாஸ்கரனை மட்டும் நான் அறிவேன்...

என்றும் அவனோடு நான் இருப்பேன்...

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.