இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


ஈழம் என்ன ஈனமா..?.





நண்பா!..

உலகத்தின் பார்வை உன்மீது இருக்கிறது!...
உன் பார்வை மட்டும் ஏன் கண்மூடி இருக்கிறது?..

இதோ... உனது காலடியில்  நம் நாட்டின்
வருங்கால பெருமைகளும்..
வளமான வாழ்வுகளும்..மண்டியிட்டு அமர்ந்துள்ளது..

உன்னுடைய விழிப்புக்காக...
உன்னுடைய  எழுச்சிக்காக..
உன்னுடைய செயலுக்காக...

ஈழம் என்று மலரும்?. என ஏங்கும்..இதயத்திற்கு..
ஈனம் இல்லை எங்கள் இதயம் என்பதை..நிருபி..
உன்னால் மட்டும் தான் முடியும்..!

நம்  நாட்டின் இருள் போக்க...
விழி.!.. எழு.!.. செய்..!..இன்றே..
நீ யோசிக்கின்ற ஒவ்வொரு நொடியும்..
பல உயிர்போகின்றதை நீ அறிவாயா?

நாம் தான் நான்கு திசைகளில் சிதறுண்டு உள்ளோம்...
நம் சந்ததிகளாவது  சந்தோசமாக..
நம் நாட்டில்  வாழட்டும்..இன்றே விழித்தெழு..!

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.