இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா”






காதலிக்கநேரமில்லை!.கண்ணே!.. நம் நாட்டை
கயவர்களிடமிருந்து மீட்கும் வரை..
 
கல் மூலம் கண்ட தெய்வம் கொண்டு..
கண்ணுக்குத்தெரியாத வடிவங்கள் கொண்டு தினம்
கலவரங்கள் செய்பவர்களை மத வியாதியில்லாத..
மனிதனாக மாற்றும் வரை..

மதவாத வெறிகொண்டு மாண்டு போகின்ற..
மடையர்களை..மனிதநேயம் கொண்ட
மனிதனாக மாற்றும் வரை..

அமைதிப்பூங்காவாம்..இந்தியாவை
ஆயுதம்கொண்டு அழிக்கின்ற புயல் காற்றை..
அமைதி எனும் அன்பு கொண்டு
அடக்கி ஆளும் வரை..
அழகான நதியான மதங்களுக்குள் - தினம்
அழுக்கடைந்த அரசியல் சாக்கடையை கலக்கி
அமுதத்தை விஷமாக்கும் அந்த
அரசியல் நயவஞ்சர்களை..
அன்பானவர்களாக மாற்றும் வரை...

காதலிக்க நேரமில்லை!..கண்ணே!..


0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.