இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


ஒப்பிடமட்டேன்..!இனி.





அன்பே..!
                
   உன்னை இனி..

   நிலவோடு ஒப்பிடமட்டேன்..! (சூர்ய) ஒளியை
   உள்வாங்கி ஒளிர்பவள் அல்ல நீ...
                 
   மலரோடு ஒப்பிடமட்டேன்...!ஒருநாளோடு
   உயிர் மடிபவள் அல்ல நீ..
                 
   அஜந்தா ஒவியத்தொடு ஒப்பிடமட்டேன்...!
   அசைவற்று இருப்பவள் அல்ல.நீ..
                  
   தென்றலோடு ஒப்பிடமட்டேன்...!கண்ணுக்கு..
   தெரியாமல் திரிபவள் அல்ல..நீ..

   இசையோடு ஒப்பிடமட்டேன்...!எல்லோர்க்கும்
   இசைவாக இருப்பவள் அல்ல..நீ..

   உலகோடு ஒப்பிடமட்டேன்...!இன்பதுன்பங்கள்..
   உந்தன் உறைவிடம் அல்ல..

   நீ என் உயிர்...
   என் உணர்வானவள்
   என்னுள் இருப்பவள்..
   என்னுள் கரைந்தவள்...
   என்னுள் வாழ்பவள்..
   உனை ரசித்து பார்க்க...
   என்றும் வாழ்வேன்..
   மரணத்தை..துரத்திக்கொண்டே..
                 

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.