இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


Showing posts with label நன்றி நவில்கிறேன். Show all posts
Showing posts with label நன்றி நவில்கிறேன். Show all posts

“பாஸ்”என்கிற பாஸ்கரன்

            

மடியில் தவழும்
மழலையாயிருந்தபோது -என்னை
அம்மா அழைத்தாள். அன்போடு..
பாஸ் குட்டி

கண்ணா மூச்சி விளையாட்டில்
கண்கள் கட்டி ஒளியும்போது
கைநீட்டி தேடி
நண்பன் அழைத்தான். நட்போடு..
பாஸ்கர்

அரும்பு மீசை அரும்பிய வயதில்
ஆருயிர் தோழன்
அருமையாய் அழைத்தான்.தோழமையோடு 

பாஸ்கரா

கவின்மிகு கல்லுரிப்பருவத்தில்
கைகோர்த்து கும்மாளமிட்ட
நண்பர்கள் கிண்டலுடன் .. 

பாஸ்கி

கவிதை எழுதும் காதல் பருவத்தில்
கண்கள் மயங்கி
காதலி அழைத்தாள் காதலோடு.. 

பாஸ் கண்ணா

பணிபுரியும் இடத்தில்
பழகிய தோழர்கள்
பாங்காய் அழைத்தனர் பணிவோடு ... 

பாஸ்

ஒவ்வொரு நிலையிலும்  என்னை
நெருங்கியிருந்தவர்கள்.. தற்போது  
தொடர்பற்றுசில காலம் மறந்திருக்கலாம்..
இந்த“பாஸ்கரனை.

    'அவர்களின் நினைவுகளில் மீண்டும்
ஒருமுறை  நான்  பூத்திருப்பேன். - உங்கள் 
பாஸ் என்கிற பாஸ்கரன்என்ற படத்தின்  
தலைப்பின் மூலமாக.
அதற்கு என் நன்றிகள்..டைரக்டர் ராஜேஷ்
என்றும் அதே அன்பு,நட்பு,பாசம்
கவிதை,காதல்,பேச்சு,சிரிப்புடன்
அவர்களின் நினைவுகளோடு..
        பாஸ்கரனாகிய..நான்

நன்றியுடன் நான்


'உயிர்' கொடுத்த தந்தைக்கும்-நன்றாய்
'உரு' கொடுத்த தாயுக்கும்
'தமிழ்' கொடுத்த தமிழாசிரியர்களுக்கும்
'உற்சாகம்' கொடுத்த உறவினர்களுக்கும்
'பாராட்டு' தந்த நண்பர்களுக்கும்
'காதல்' தந்த கண்மணிக்கும்
'ஏக்கம் தந்த சமுதாயத்திற்கும்
சந்தர்ப்பம் தந்த ஈகரைக்கும்
கவிதைகளை பாராட்டி"சிறப்புக்கவிஞர்"பட்டம்
தந்து வளர்த்த ஈகரை உறவுகளுக்கும்
என் தாய்நாட்டிற்கும்,நான் தங்கியிருக்கும்
சிங்கப்பூர் நாட்டிற்கும்..
என்னை வளர்க்க போகும் உங்களுக்கும்.
அன்புகலந்த நன்றியுடன்..
உங்கள்..
-தேனிசூர்யாபாஸ்கரன்.

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.