இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


Showing posts with label காதல் தொடர் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் தொடர் கவிதைகள். Show all posts

திருத்த முடியா கவிதை நான்-4 (தொடர் கவிதை –நான்காம் பாகம்)




 
உன்னால் மட்டும் எப்படி முடிகிறதோ..? உன்
இதழோடு புன்னகை பூக்களை பூக்கவிட்டு என்
இதயத்தில் இதமாக இடியை இறக்குகிறாய்..?  
இரத்த நாளங்களை பெயர்த்தெடுத்து அதில்
ஊஞ்சல்கட்டி ஆடுகிறாய்.-என் இதயத்தில்
இரத்தப்பூக்களை பூக்கச்செய்கிறாய்...?

நான் எழுதும் கவிதையை நீ ரசிக்கிறாய்..!
நான் ரசிக்கும் கவிதையாய் நீ இருக்கிறாய்..!என்
கவிதையாய் நானும் கொஞ்சம் மாறக்கூடாதோ..?இந்த
கன்னியும் எனை கொஞ்சம் கொஞ்சக்கூடாதா..?
கொஞ்சும் எண்ணம் உன்னுள் குடி கொண்டதா..?
     
வெளி உலகம் கண்டுவிட்டால் வேதனை..என்று..
வேலி போட்டு நடிக்கின்றாய்..!என்னை
வெளிச்சமிலா நரகத்தில் தள்ளி தினம்
வேதனை பட வைக்கிறாய்..!-என்
வெந்த இதயத்தில் வேல்பாய்ச்சுகிறாய்..!

காதல் கற்றது உன்னிடம் என்பதால் நான்
கேள்விக்கணைகளை தொடுக்கிறேன்..
கேள்விகணைகளை நான் தொடுத்தால்...நீயோ அமைதி
வேள்விகளை தினம் நடத்துகிறாய்...
என்னுள் பல திருத்தங்கள்.. நீ..செய்தாலும்..
உன்னால்..திருத்த முடியா கவிதையாக நான்..
 

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)



அன்பே..!    
தினம் உன் பேச்சு கேட்காத இதயம் படபடப்பில்...
சில நேரம் என் மனமும மரணத்தில்..
காத்திருந்து காலம் போனது..உன் மனம் மட்டும்
எந்தன் நினைவு கொள்ளாது...ஏன்.?


நீ பேசாத நேரங்களில்..என் புன்னகைப்பூக்களும்..
பொழிவின்றி மலராமல்..அனலின் வதைப்பில்..
ஏக்க தருணங்களில்..நான்..வலியுடன்..
உனக்குள் அந்த வலி உண்டானதா..?


 உன்னிதழ் பேச்சு கேட்காமல்..உலகம் இருண்டது எனக்கு...
 உன் மூச்சின் சப்தம் கேட்டு முழித்து கொண்டது...என்..கிழக்கு
 கேட்காமல் போய்விடுவேனோ என உன் பேச்சை இசையாய்
 அலைபேசியில். அடைத்தேன்..நானும் அதில்
 அடைக்கப்பட்டேன்.என் மூச்சின் சப்தம் உனக்கு கேட்டதா..?


 முடிவுரை போல் நம் இதயம் இணையாது என்று நீ
 முன்பே சொல்லிவிட்டபோதிலும் அதையே நினைத்து
 முன்னுரை மட்டுமே எழுதுகின்றேன்..என் இதயத்தில்...
 முடிவுரையை நீ மாற்றுவாய் என்று.
 முடிவுரையை மாற்றும் மாற்றம் வந்ததா.. உனக்குள்..? 

 என் இனியவளே..! என் இனிய வலியே..!
 ஒருமுறை மட்டும் அந்த உண்மை சொல்லி விடு..!
 பலமுறை நான் வாழ ஒரு உலகம் கிடைக்கட்டும்.
 உன் மனம் எனை ஒரு நொடியாவது நினைக்கட்டும்


 (தொடரும்..)

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)




உயிரற்ற உரைநடையான என்னை
உன் உண்மையன்பால் வாசித்து.. 
உயிர்கொண்ட கவிதை போல எனை
      உயிர்ப்பெள செய்து விடு.. அதை தினமும் 
      ஒருமுறை நீ என்னை வாசித்து விட்டுப்போ..!அதன் மூலம்
      நான் தினமும் சுவாசித்துக் கொள்கிறேன்..

     நான் படிக்கும் புத்தகத்தில் சில எழுத்தில்..
      உன் பெயரின் எழுத்தை..கண்டறிந்து..
      அதை குண்டு எழுதாக்கி..நான் தினமும்
      இதய அறையில் வாசிக்கின்றேன். வேதமாக
      நீ வாசிக்கின்ற புத்தகத்தில் என் பெயர் வசிக்கின்றதா...? 
        
      முகவரிகள் இல்லாத முகமாய்...மனதை
      மூடி வலி மறைத்து நான் செல்கையில்..உன்
      முகவரியாய் நான் இருப்பதை...உன்
      முக வரி காட்டுகிறதே..! நீ அதை அறிவாயா..?
               
      அங்கிருந்து நான் நகருகையிலே..
      சோகவரியாய்..உன் முகம்..! உன்னருகில் இருக்கையில்
      சுகவரியாய்.. உன் முகம்..! உன்னுள் நான்
      முழுதாய் மூழ்கியுள்ளேனா..?

      அன்று..     
      உன்னை எழுப்பும் அலாரமாய்..
      சில நாட்கள் நான் இருந்தபோது
      இவ்வுலகை எழுப்பும் சூரியனானேன்..என         
      தினம் தினம் கர்வம் கொண்டேன்..
      இன்று..
      உன்னை எழுப்பமுடியா என் விடியலும்
      அஸ்தமனமாகி போனதோ..? அந்த சூரியனும்..
      கடலுக்குள் அமிழ்ந்து கரைந்து போனதோ..?
      உனக்கும் தினமும் விடிகின்றதோ...?
  

கைம்பெண்ணின் காதல் க(வி)தை-2


   

     கல்லூரி வரை என் வாழ்வோடு
     கலந்திட்டவனே...என்
     காலம் முழுதும் என்னோடு
     கலந்திட மாட்டாயா..?
     வேலைக்காக வெளிநாடு
சென்றவனே,,! என் மன
வேதனையை அறிந்திடாயோ.? 

    இல்லற வாழ்க்கையிலே..
    என் மன சம்மதமின்றி..
    இனி இது தான் வாழ்வென
    ஏற்றுக் கொண்ட ஒருவரோடு..
    நல்வாழ்க்கை வாழும் முன்..
    நாசமாகி போனதே.!. திடீரென     
    உண்டான இதயத்தின் வலிதனில்
    அவரிதயம் செயலிழந்து போனதே..
    என் வாழ்வும் பொலிவிழந்து போனதே..!

   எல்லாம் முடிந்ததென்று..
   என்னிலை நினைத்து அழுதிடுகையில்
   என்னருகில் வந்து சேர்ந்தாய்..
   என் நிலை கண்டு துவண்டு போனாய்..
   துடிதுடித்துப்போனாய்..அதோடு.

   வடிகின்ற கண்ணீரை துடைத்த உன்
   விரல்கள்..வதங்கிய என் முகத்தை
   தாங்கிய உன் தோள்கள்..
   “உன் வாழ்வு முடியவில்லை..
   என்னோடு தொடரும் இனி.”   
   என்றுரைத்த உன்பேச்சு.    
   எப்போதும் வேண்டுமென
   என் மனம் ஏங்கினாலும்..

   ஊராரின் பேச்சுக்குள்...
   உலகத்தின் பார்வைக்குள்..  
   ஊமையாகிப்போன என் காதலும்
   ஊனமாகிய என் வாழ்வும்..மீண்டும்
   தளிர்த்து விட்டால்..வேசங்கள் பல
   எனக்கிட்டு இட்டு வேசியின் நிலையில்
   நிறுத்திடுவர். யாரோ தவறுதலால்
   ஏற்பட்ட சிதறல்களாய் என் வாழ்வு..!

    
      உன் வாழ்வு நலமாகட்டுமென..
      உன்னை மறுத்து..என் மனதை
      மண்ணில் புதைத்து...மீண்டும் நான்
       மரணித்து வாழ்கிறேன்..உன் நினைவோடு.
       விதவை எனும் பெண்ணின் நிலை..
       என்றுமே..இதுவே என நினைத்து..
       சில நேரம் விக்கித்து அழுகிறேன்.



கைம்பெண்ணின் காதல்..க(வி)தை-1


விபரமறியா பருவத்தில்..
விளைந்திட்ட உறவுக்குள்..
விளையாட்டுத் தனத்தோடு..  
இடையிலே..கைகோர்த்து
கடைவீதியை அளவெடுத்து..
நடந்து செல்கையிலே..நம்மில்
முளைத்திட்ட முத்தங்களை
பிரியமென்று நாம் நினைத்ததுண்டு
                
பள்ளிப்பருவத்திலே..
பருவமெய்திடாத நேரத்திலே
சேர்ந்து படித்திட்ட பள்ளிக்குள்
பகிர்ந்திட்ட நம் கல்விக்குள் கலந்திட்டதை
அன்பென்று நாம் சொன்னதுண்டு.

கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து.இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.


திருமண வயதினிலே...
இருமன இணையும் நேரத்திலே
உன் மனம் வேண்டுமென்று
என் மனது தவிக்கிறதே..
அன்பென்று..பாசமென்று..
நட்பென்று..நினைத்ததன்று..
காதலாய் இன்று மாறியதோ....?

                 ( தொடரும்.. )

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.