இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


Showing posts with label சிறு கவிதைகள். Show all posts
Showing posts with label சிறு கவிதைகள். Show all posts

எனது சிறு கவிதைகள் - 4


           மணம்

மலர்களின் மனம் அறிகின்ற வேளையில் இந்த மங்கையின் மணம் வீசுகின்றதே..!


உன் நினைவுகள் 

 காலைப் பனி காற்று போல ...உன் நினைவுகள் என்னை தினம் கட்டுண்டு கிடக்கச் செய்கின்றனவே..!
         
                           வார்த்தைகள்

ஒரு நொடி உன் பார்வை எனை தாக்குகிறது. அதில் ஓராயிரம் வார்த்தைகள் நடைபயிலுகிறது...!

 என் விழிகள்

சுவாசிக்க காற்றிருந்தும், சுற்றத்தார் அருகிலிருந்தும்..சுழலுகிறது..
என் விழியிரண்டும்..உன்னைக் காண..

 பசிபிக் கடல்

பசிபிக் கடலாய் இருந்த மனம் என்னவளின்
பார்வையால் பாலைவன ஊற்றாய் மாறியதே.!


இதயம்

பக்கத்தில் நீ வந்தால் பதறுகிறது..இதயம்..- நீ
பார்வையை விலக்கிக் கொண்டால் பரிதவிக்கிறது இதயம்...


எனது சிறு கவிதைகள் -3 ( சோகம் )





 நீ சோகமா..?
மனதின் ஆழத்தில் சோகம் இருந்தால் கவிதை வருமாம்..!
என் மனதின் ஆழத்தில் நீயுள்ளாய்..!
கவிதை அருவியாய் வருகிறது..நீ சோகமா..?

செல்லரிப்பு
செத்தபின்பு செல்லரித்து போகின்ற உடல் இது..
உன்இல்லைசொல்லால்                       
செல்லரிக்க வைத்து விட்டாயே..? என்
உயிர் நீ இருக்கும் போதே...!
           
கலங்கிய மேகமாய்...
கரையோடு அலைபேசும் பேசும் 
காதல் கலங்கியதில்லை என்
கண்களோடு நீ பேசும் மௌனம் மட்டும்..-
கலங்கிய மேகமாய் ஆக்கியதடி..! என் கண்களை..

வானம் பார்த்த பூமி
வானம் பார்த்த பூமியாய் நான் உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீ மட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!           

பலூன்
முள்பட்டால் உடைந்துவிடும் பலூன்  போல -உந்தன்
சொல்பட்டதால் உடைந்ததடி..- என் மனது...
                          

எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு ( காதல் )



ஜன்னலின் கவிதை..

 நீ வலம் வரும் தெருவில் உள்ள -என்
 வீட்டு தெருவோர ஜன்னலும்
 உன்னால் தினந்தோறும் கவிதைகள் பாடுதடி..!
 என்னுடைய புலம்பல்கள் தாங்காமல்..

போதைப்பூக்கள்

 நீ செல்கின்ற பாதையில் தினம்
 கோடிப் கவிதைப்பூக்கள் பூக்கின்றது...!
 நீ சொல்கின்ற வார்த்தையில் தினம்
 கோடிப் போதைப்பூக்கள் பூக்கின்றது..! என் மனதில்.
              

         அக்னியின் உற்சவம்

 அக்னியின் உற்சவ நாட்களில் ..உன்
 அழகுப் பாதங்கள் ஒரு அடி எடுத்து வைத்தாலும்..
 அல்லல் படுகிறது...!என் மனம்.    

                        மழைச்சாரல்

 உன் நினைவுகள்...மழையில் பிரியும் சாரல் போல.
 என்னுள் சுகமாய்...குளிராய்...மென்மையாய்..     
 என்றும் மழைக்காலம் தான்..எனக்குள்ளே...
                       
                       மவுனம்

 நீ பேசாமல் பேசும் பேச்சு கூட பலநேரம்
 போதையை உண்டாக்குகிறது..எனக்குள்...
 நீ தான் உலகின் போதையுள்ள பேதையோ..?

சிறு கவிதைகள்-1( காதல் )

       

          
          உண்மைகாதல்

             உள்ளத்திற்குள்  உனக்கு நீயே
          உருவாக்கிக்கொள்வதல்ல...தானாக
          உருவாகி கொள்வது தான் ....
          உண்மையான காதல்...

      அழுக்கு
  

 அன்பே!..
      நீ அதிகமாக உச்சரிக்காத..என் பெயர் கூட
      சில நேரம் அழுக்காய் தெரிகிறது... 
 
      மாக்கோலம்

   அன்பே!..
               நீ  எனை  தொட்டு இடுவதனால்..
              மண்ணில் இடும் மாக்கோலமாக..
              மாறக்கூட தயார் தான்...நான்..

    துன்பம் 
     
     அமுதே!.
       என் மரணத்தில் இல்லா துன்பம்   
       உன் மகிழ்ச்சி இல்லா முகத்தால்        
       உண்டாதானதடி..எனக்கு.

   போதனை மடம் 
           
         அன்பே!..  
       நாம் தினந்தோறும் சந்தித்து பேசும்               பேருந்து நிறுத்தம் கூட  எனக்கு 
       போதனை மடம் தான்..
          
       
           

     

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.