இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)



அன்பே..!    
தினம் உன் பேச்சு கேட்காத இதயம் படபடப்பில்...
சில நேரம் என் மனமும மரணத்தில்..
காத்திருந்து காலம் போனது..உன் மனம் மட்டும்
எந்தன் நினைவு கொள்ளாது...ஏன்.?


நீ பேசாத நேரங்களில்..என் புன்னகைப்பூக்களும்..
பொழிவின்றி மலராமல்..அனலின் வதைப்பில்..
ஏக்க தருணங்களில்..நான்..வலியுடன்..
உனக்குள் அந்த வலி உண்டானதா..?


 உன்னிதழ் பேச்சு கேட்காமல்..உலகம் இருண்டது எனக்கு...
 உன் மூச்சின் சப்தம் கேட்டு முழித்து கொண்டது...என்..கிழக்கு
 கேட்காமல் போய்விடுவேனோ என உன் பேச்சை இசையாய்
 அலைபேசியில். அடைத்தேன்..நானும் அதில்
 அடைக்கப்பட்டேன்.என் மூச்சின் சப்தம் உனக்கு கேட்டதா..?


 முடிவுரை போல் நம் இதயம் இணையாது என்று நீ
 முன்பே சொல்லிவிட்டபோதிலும் அதையே நினைத்து
 முன்னுரை மட்டுமே எழுதுகின்றேன்..என் இதயத்தில்...
 முடிவுரையை நீ மாற்றுவாய் என்று.
 முடிவுரையை மாற்றும் மாற்றம் வந்ததா.. உனக்குள்..? 

 என் இனியவளே..! என் இனிய வலியே..!
 ஒருமுறை மட்டும் அந்த உண்மை சொல்லி விடு..!
 பலமுறை நான் வாழ ஒரு உலகம் கிடைக்கட்டும்.
 உன் மனம் எனை ஒரு நொடியாவது நினைக்கட்டும்


 (தொடரும்..)

1 கருத்துரைகள்:

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

நன்றிகள்..நண்பரே..

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.